திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் . அந்த வகையில் இன்று பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் .
இந்த நிலையில் திருச்சி பச்சைமலை செம்பர நாடு பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 73 ) என்பவர் தனக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் அதனை மீட்டுத் தர வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் …
அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர் தீ குளிக்க முயன்ற நபரால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது ..

