திருச்சியில் 8 வது மாத திடீர் பிரசவத்தில் பிறந்த குழந்தை, தாய் பரிதாப பலி.
தாயும் பரிதாபமாக இறந்தார்

திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி திவ்யா (வயது 32.) இவர் 8 மாத கர்ப்பணியாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த நேற்று செவ்வாய்க்கிழமை ( 23 ம் தேதி) வீட்டில் இருந்த போது குளியலறைக்கு சென்றுள்ளார் . அப்போது அவருக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. சிறிது நேரத்தில் திவ்யா மயக்கமடைந்து உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது கணவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்கள் இரண்டு பேரையும் பரிசோதனை செய்ததில் தாய் மற்றும் குழந்தை இரண்டு பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென்று பிரசவத்தில் தாய் மற்றும் குழந்தை இறந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

