திருச்சியில் முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா தலைமை தாங்கி ரத்த தானம் செய்தார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் காவேரி மருத்துவமனையில் நேற்று இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் ரமேஷ் ரத்ததான முகாமை துவக்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளில் அவரும் ரத்த தானம் செய்தார். விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா தலைமை தாங்கி அவரும் ரத்த தானம் செய்தார். மத்திய மாவட்ட தலைவர் எம். செந்தில் முன்னிலை வகித்தார்.

மருத்துவமனையில் ஏற்பாடுகளை நிர்வாக இயக்குனர் அன்பு செழியன் அவர்கள் . மேலாளர் விஜயராகவன் அவர்கள். நோய் எதிர்ப்பு இரத்தவியல் மற்றும் ரத்தமாற்று மருத்துவர் சுனில் ஜெய் கர்னேஷ். சி எஸ் ஆர் மற்றும் மக்கள் தொடர்பு மேலாளர் மனோஜ் தருமர் அவர்கள் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அக்பர் அலி, சரண்ராஜ், ஆசிப், பாரதிராஜா, பெரிய மிளகு பாறை சுப்பிரமணி, மணப்பாறை நடேஷ் குமார், முத்து டிஜிட்டல் ஜெயராஜ், சமயபுரம் சதீஷ்குமார், லால்குடி விஜய்,தாஜுதீன்,
தனசேகர்,கோகுல், ஞானவேல் ஜீவா மஞ்சள்திடல் சிவா, பாரத், புத்தூர் நடராஜ், ஹரிஹரன், கார்த்திக், மகளிர் அணி ரேணுகாதேவி தாமரை செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்

