லால்குடி அருகே
கணவர் இறந்த துக்கம் தாங்காமல்
பெண் தற்கொலை
திருச்சி லால்குடி அடுத்த கொலாக்குடி மல்லிகை நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 56). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
கணவரின் இழப்பு அவரை பெரிதும் பாதித்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே கடும் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனிமையில் வாடினார்.
பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லட்சுமி வீட்டில் இருந்த அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் நாகலட்சுமி கே.கே.நல்லூர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் கே கே நல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

