திருச்சி தென்னூரில் 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த காவலாளி கைது.
திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஒர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7 வயது ச பெண் குழந்தைக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்த தெப்பக்குளம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோமதீஸ்வரன் (வயது 64 ) என்ற காவலாளி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த குழந்தையின் தாய் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கோமதீஸ்வரன் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

