திருச்சியில்
மகளுடன்வாக்குவாதம் செய்த பின் பெண் மாயம் .
திருச்சி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபு இவரது மனைவி எழிலரசி (வயது 43).இவர் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் வங்கியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவதன்று வீட்டில் இருந்த எழிலரசிக்கும்,அவரது மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த எழிலரசி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது உறவினர்கள் பல இடங்கள் தேடி பார்த்தும் எங்கும் எழிலரசி கிடைக்கவில்லை.
இது குறித்து கணவர் பிரபு கோட்டை காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான எழிலரசியை தேடி வருகின்றனர்.

