Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம்.

0

'- Advertisement -

திருச்சியில் இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி

தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம்.

திருச்சியை அடுத்த மணிகண்டம் சூறாளிப்பட்டி பகுதியை . சேர்ந்தவர் பொன்மணி இவரது மகன் மித்ரன் (வயது6).1ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை பொன்மனி தனது மகன் மித்ரனுடன் இருசக்கர வாகனத்தில் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டு,சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தின் முன் பகுதியில் மித்ரன் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்ததில், காரின் பின்பக்கம் டயர் ஏறி மித்ரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

 

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து சென்று கார் மோதி இறந்த மித்ரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண் முன்னே சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்புபையும் ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.