Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் .

0

'- Advertisement -

தமிழ்நாடு மின்வாரியத்தில்

Ad banner

60,000 காலிப்பணியிடங்களை முறையாக நிரப்பாமல்

ஒப்பந்ததாரரின் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும் வழிகாட்டி நெறிகளை கைவிட வேண்டும்.

ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் முடிந்த 23 மாதங்கள் கடந்த பிறகும் ஊதிய உயர்வு கிடைக்குமா? இல்லையா? என்ற நிலைக்கு தீர்வு காண வேண்டும்.

 

ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் உட்பட அனைவருக்கும் பிரித்தாளும் முறையை கைவிட்டு ஒன்றாக வழங்க வேண்டும்.

மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க ஒரு லட்சம் கோடிகளை, கொடுத்து நிர்பந்தப்படுத்துவதை

மத்திய அரசு

கைவிட வேண்டும்.

மாநில அரசின் கீழ் மின் வாரியங்களை செயல்படுத்த நிதி உதவி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று செவ்வாய் அன்று காலை தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்

வாயிற் கூட்டம்

நடந்தது.

இதே போன்று

மதியம் உணவு இடைவேளையின் போது மன்னார் புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த வாயிற் கூட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் பெங்கராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் தலைவர் நடராஜன், வட்ட செயலாளர் பழனியாண்டி, எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளர் சிவ செல்வம்,

இன்ஜினியர் சங்க திருச்சி மண்டல செயலாளர் நரசிம்மன், வட்ட செயலாளர் சங்கர் கணேஷ், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாவட்ட தலைவர் ஆலயமணி, தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு மாநில செயலாளர் இருதயராஜ் ஆகியோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில்

ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செந்தில்

நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.