திருச்சி மாநகராட்சி
தூய்மை பணியாளரின்
14 மகள் திடீர் மாயம் .
திருச்சி பாலக்கரை ரயில்வே காலனி
பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக உள்ளார் .இவரது 14 வயது மகள் அங்குள்ள கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பின்னர் இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.