திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு. டிரைவருக்கு கத்திக்குத்து .5 பேர் கைது 2 பேருக்கு வலை
திருச்சியில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு
ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து
5 பேர் கைது
திருச்சி ஆர்சி நகரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது26) ஆட்டோ டிரைவர். இவருக்கும் பஞ்சப்பூர் பகுதியை சேர்ந்த சில ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே திருச்சி _ மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆர்.சி நகர் அருகே ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 29ந்தேதி அப்துல் ரகுமான் ஆர்சி நகர் அருகே சவாரிக்காக நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பலத்த காயமடைந்த அப்துல் ரகுமான் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து கீழப்பஞ்சப்பூர் சேர்ந்த பாரதிதாசன் (வயது21, ஆனந்தபாபு (வயது 40), முருகன் (வயது 42) எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த முருகேசன் (வயது 53)மற்றும் தீரன் மாநகரை சேர்ந்த தேசிய ராஜா (வயது 24) ஆகிய ஐந்து ஆட்டோ டிரைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரதாப், செட்டி ராஜ்குமார் மற்றும் விஜய் ஆகியோரை தேடி வருகின்றனர்.