Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு பெறுவோம். திருச்சியில் தொல். திருமாவளவன் எம்.பி பேட்டி

0

'- Advertisement -

ஊழலை காட்டிலும் மதவாதம் ஆபத்தானது.

 

கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.

 

திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு பெறுவோம்

 

திருச்சியில் தொல். திருமாவளவன் எம்.பி பேட்டி

 

மதசார்பின்மை காப்போம்’ மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி திருச்சியில்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தலைமையில் நாளை பிரம்மாண்டமாக நடக்கிறது.

பேரணி சென்னை -மதுரை 4 வழி நெடுஞ்சாலையில் டி.வி.எஸ்.டோல்கேட் அருகில் இருந்து புறப்படுகிறது. இதற்காக டி.வி.எஸ். ரவுண்டானா அருகே மேடை அமைக்கப்படுகிறது. பேரணியானது டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து கிளம்பி தலைமை தபால் நிலையம் சிக்னல்,ஒத்தக்கடை வழியாக திருச்சி கேம்பியன் பள்ளி அருகில் நிறைவடைகிறது. பேரணி நிறைவடையும் இடத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இந்தப் பேரணி 2.8 கி.மீ. தூரத்துக்கு பேரணி செல்கிறது.இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

விசிக சார்பில் நாளை மாலை திருச்சியில் மதச்சார்பின்மையை காப்போம் என்கிற மையக்கருத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது. இன்றைய அரசியல் சூழலில் மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்கு அறைகூவல் விடுக்கும் பேரணியாக அமையும்.

மதச்சார்பின்மைக்கு எதிரான தாக்குதலை பா.ஜ.க செய்து வருகிறது. அதன் யுத்திகளில் ஒன்று தான் சிறுபான்சமூகத்திற்கு எதிரான வெறுப்பை பரப்பும் யுத்தியாகும். அந்த யுத்தியை பாஜக வினர் கையாள்கின்றனர்.

பா.ஜ.க அரசு திட்டமிட்டு வெறுப்பு அரசியலை ஆட்சி அதிகாரம் மூலம் பரப்புகிறது.

பா.ஜ.க அரசு ஆட்சி அமைந்ததிலிருந்து சி.ஏ.ஏ, முத்தலாக் சட்டம், வக்ஃபு திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது அரசியலமைப்பு சட்டத்திற்கும், அதன் உயிர் மூச்சான மதச்சார்பின்மைக்கும் எதிராக செயல்படுகிறது.

இது முஸ்லீம்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது.

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் அதன் உயிர்மூச்சான மதச்சார்பின்மையை காக்க தான் இந்த பேரணி நடத்துகிறோம்.

எந்த மதத்தின் சொத்து நிர்வாகத்திலும் ஒன்றிய அரசு தலையீடாது. ஆனால், இஸ்லாமியர்களின் சொத்து மீது மட்டும் வெளிப்படையாக தலையிடுகிறது. அது அரசியலமைப்பு, மதச்சார்பின்மைக்கு எதிரானது.

கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பை கட்டவிழ்த்து அதன் மூலம் பாஜக வினர் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். தற்போது தமிழ்நாட்டிலும் அதற்கான முயற்சியை செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் சமூக நீதி, தலித் மக்களுக்கு எதிரான பிரச்சனைகள், வாழ்வாதார அடிப்படை பிரச்சனைகள் குறித்து பேசாத பா.ஜ.க வினர், இன்று மதத்தின் பெயரால் முருகன் மாநாடு நடத்துகிறார்கள்.

கடவுள் நம்பிக்கையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பார்க்கிறார்கள்.

இந்த சூழலில் தான் தமிழ்நாட்டை காக்கவும் அரசியலமைப்பையும் மதச்சார்பின்மையை காக்கவும் பேரணி நடத்துகிறோம்.

கட்சி சார்பற்ற முறையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும்.

 

Suresh

இப்பேரணி தேர்தலை மையப்படுத்தி நடத்தப்படவில்லை.

மதச்சார்பின்மைக்கு ஆதரவானவர்கள் இந்தியா கூட்டணியிலும், மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள் பா.ஜ.க தலைமையிலும் அணி சேர்ந்துள்ளார்கள். பாஜக கூட்டணியில் தான் அதிமுக வும் உள்ளது.

தேர்தலை மையப்படுத்தி பாஜக முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறது.

 

 

அகமதாப்பாத்தில் நடந்த விமான விபத்து இந்திய அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது.

வருங்காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நிகாழாத வகையில் ஆவன செய்ய வேண்டும்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்

.வி.சி.க நடத்தும் பேரணி தேர்தலை மையப்படுத்தி நடத்தப்படல்லை, கொள்கை அடிப்படையில் தான் நடத்துகிறோம்.

திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம். தேர்தலில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது. அதிக எதிர்ப்பார்புகள் உண்டு. கட்சி நலன் முக்கியமானது அதை விட கூட்டணி நலன் முதன்மையானது. எனவே எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தேர்தல் நேரத்தில் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்போம்.

கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால் வரும் 2026 தேர்தல் அதற்கான காலம் அல்ல.

திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது

மாயத்தோற்றம். திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பார்க்கிறார்கள். ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் உறுதியாக இருக்கிறோம்.

அவர்களுடன் கூட்டணியில் இருந்த பாமக – தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இன்று அவர்கள் கூட்டணியில் இல்லை. அவர்களையே மீண்டும் அந்த கூட்டணியில் இணைக்க முடியாத நிலையில் தான் பாஜக – அதிமுக உள்ளது.

2026 ல் பா.ஜ.க ஆட்சி என கூறும் அண்ணாமலை

பா.ஜ.க கூட்டணியை சிதைக்க பார்க்கிறார். தான் இல்லாமல் பா.ஜ.க – அதிமுக கூட்டணி அமைந்ததையும் வேறு கட்சிகளை அவர்கள் கூட்டணியில் சேர்ப்பதையும் அண்ணாமலை விரும்பவில்லை.

 

உலகத்தில் ஊழலற்ற ஆட்சி என்பது எங்கும் கிடையாது. ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும் அதை கூறி ஒரு ஆட்சியை வீழ்த்த முடியாது.

 

அண்ணாமலை தலைவராக இருந்த போது அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆனால் அது குறித்து எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிட வில்லை. இது தான் தமிழக அரசியலின் நிலை.

ஊழல் மிகப்பெரிய பிரச்சனை தான் அதை விட மேலான பிரச்சனைகள் உள்ளன. ஊழலை விட, மதவாத ஜாதியவாத பிரச்சனை பெரியது. மத வெறி ஜாதி வெறி ஆகியன மக்களை எதையும் சிந்திக்க விடாது. அதை தான் முதலில் வீழ்த்த வேண்டும் .

இவ்வாறு அவர் கூறினார்.

 

பேட்டியின் போது அருகில் பேரணி ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த  கவுன்சிலர் பிரபாகரன், திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் தங்கதுரை, தமிழ்நாதன், மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் , அரசு உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.