திருச்சி ஜங்ஷனில்
பார்க்கிங் பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர் மாயம்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்

இலங்கேஸ்வரன் இவரது மகன் பார்த்திபன் (வயது 32) திருமணமாகாத இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்த்திபன் திடீரென மாயமானார்.
இது தொடர்பாக உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் அவரது சகோதரி வசந்தா லட்சுமி கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் கன்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த 5ந் தேதி பார்த்திபன் தனது ஆட்டோவை திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு மாயமானது தெரிய வந்தது இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது