Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தந்தை இறந்த அன்றும் பொதுத்தேர்வு எழுதிய மாணவியின் இல்லம் சென்று ஆறுதல் கூறி கல்வி உதவி தொகை வழங்கிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .

0

'- Advertisement -

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின்

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் மாணவி ஷாலினி, அருகே உள்ள தேனேரிப்பட்டி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு நேரத்தில் இவரது தந்தை சண்முகம் இறந்துவிட்டார். இருப்பினும் அந்த துக்கத்தை மனதில் வைத்து கொண்டு மாணவி ஷாலினி பொதுத் தேர்வினை திருச்சி திருவெறும்பூர் பெல் வளாக பள்ளி மையத்தில் எழுதினார். ஆசிரியர்களும் சக மாணவர்களும் அவருக்கு ஆறுதல் கூறி தேர்வை எழுத வைத்தனர்.

 

இந்த நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று மாணவி ஷாலினியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி, தந்தையின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது ஒன்றிய செயலாளர் கங்காதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.