Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அதிக ஒளி எழுப்பும் டூ வீலர் சைலன்ஸர்கள் பறிமுதல். தனியார் பேருந்து ஏர் ஹாரன்களும் அகற்றப்படுமா?

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் மற்றும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இடையூறு ஏற்படுத்தும் இருசக்கர வாகனங்களில் சைலன்ஸர் பொருத்தப்பட்டு இருசக்கர வாகனங்களை இயக்குவதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.

 

புகாரை எடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நகரத்தினத்தின் உத்தரவின் பெயரில் சமயபுரம் போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திக், பாலமுருகன் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர பொருத்தப்பட்டிருந்த சைலன்ஸர்களை பறிமுதல் செய்தும் ஆயிரம் ரூபாய் அபதாரம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

 

மேலும் இதுபோன்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று திருச்சி மாநகர் முழுவதும் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு அதிக வேகத்துடன் விபத்து ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை இயக்குவதுடன் காது ஜவ்வை கிழிக்கும் ஏர் ஹாரன் அடித்த படி பள்ளிகள், மார்க்கெட், கோயில்கள் என மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பேருந்து இயக்கி வருகின்றனர்.

 

உடனடியாக தனியார் பேருந்துகளில் உள்ள ஏர் ஹாரன்களை திருச்சி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.