Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா விளம்பர பேனரை அகற்றியதை கண்டித்து பக்தர்கள் மறியலால் பரபரப்பு .

0

'- Advertisement -

தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில்

திருவிழா விளம்பர பேனரை அகற்றியதை கண்டித்து பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

 

திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா வருகிற 1-ம் தேதி தொடங்குகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது . இந்த நிகழ்ச்சி நிரல் தொடர்பான விளம்பர பேனர்

தென்னூர் மந்தை பகுதியில் தெய்வீக மகா சபா சார்பில் வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கு பள்ளிவாசலை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தாங்கள் அந்த இடத்தில் பேனர் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Suresh

அதைத் தொடர்ந்து

காவல்துறை இன்று தெய்வீக மகா சபா நிர்வாகிகள் வைத்த பேனரை அகற்றிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தெய்வீக மகாசபா நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு தில்லை நகர் ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 

இது குறித்து தகவல் அறிந்த தில்லை நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை. நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

 

இதனால் இன்று காலை தில்லைநகர் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது .

Leave A Reply

Your email address will not be published.