அஇஅதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் காணொளி கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.