திருச்சியில் கடன் தொகையை உறுப்பினர்கள் திரும்ப செலுத்தாததால் மகளிர் சுய உதவி குழு தலைவி தீக்குளித்து தற்கொலை
திருச்சியில் மகளிர் சுய உதவி குழு
தலைவி தீக்குளித்து தற்கொலை
கடன் தொகையை உறுப்பினர்கள்
திரும்ப செலுத்தாததால் துயர முடிவு.
.
திருச்சி பீமநகர் நடு ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 35). மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து வந்தார். இவருடைய குழு உறுப்பினர்கள் சிலர் கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே வங்கி அதிகாரிகள் அவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். இதனால் விரக்தி அடைந்த பரமேஸ்வரி சில தினங்களுக்கு
மண்ணெண்ணையை
தனது உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து கொண்டார். சிறிது நேரத்தில் தீ உடல் முழுவதும் பரவி பரமேஸ்வரி பலத்த காயமடைந்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பரமேஸ்வரி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

