வாரத்தின் இறுதி நாளான நாளை (22.02.2025) சனிக்கிழமை திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பின்வரும் இடங்களில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சி மாவட்டம் முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை துணை மின்நிலைய பகுதிகளான மகாதேவி, ஜம்புமடை, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, கலிங்கப்பட்டி, பிள்ளாபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள்.
மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.