Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கஞ்சா விற்ற தலைமையாசிரியையின் மகன் உள்ளிட்ட 2 பேர் கைது

0

'- Advertisement -

Ad banner

திருச்சி அருகே கஞ்சா விற்றதாக பள்ளி தலைமையாசிரியையின் மகன் உள்பட இருவரை போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவெறும்பூா் அருகே பெல் நகா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் துவாக்குடி போலீஸாா், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டனா். சோதனையில், வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

TVK ad

வீட்டிலிருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவா் என்ஐடி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் ரோஷன் (வயது 26) என்பதும், இவரது தாய் என்ஐடியில் உள்ள பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. ரோஷனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து அவா் அளித்த தகவலின் பேரில், மற்றொரு வீட்டில் கஞ்சா விற்ற பிகாா் மாநிலம் ஹாஜி பஜாா் பகுதியைச் சோ்ந்த பிரஜிரா பிரசாத் மகன் அசின் வைபவ் (27) என்பவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களது வீடுகளிலிருந்து ஐபோன், வெல்டிங் இயந்திரம், பயண பைகளை கைப்பற்றினா்.

இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.