Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கலிகாலம்டா. 10 வயது சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது

0

 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது சில்லமரத்துபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரி (வயது 28) குழந்தைகள் பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழும் இவர்வேலை பார்த்து வரும் காப்பக விடுதியில் தங்கி பயின்று வரும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த 10 வயது பள்ளி சிறுவன் இந்த காப்பகத்தில் தங்கி இருந்து அருகில் உள்ள சில்லமரத்துபட்டியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த சிறுவனுக்கு முனீஸ்வரி இரவில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த சிறுவன் அந்த காப்பகத்தில் இருந்து போடிநாயக்கனூர் சில்லமரத்துப்பட்டி அருகே உள்ள மற்றொரு தனியார் தொண்டு நிறுவன காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு பள்ளி சிறுவன் மனரீதியாக பாதிப்புகளுடன் உடல் சோர்வாக காணப்பட்டு வந்த நிலையில் அங்குள்ள காப்பக விடுதி பராமரிப்பாளர்கள் அவனது சோர்வு குறித்து காரணம் விசாரித்த பொழுது தான் முதலில் தங்கி இருந்த விடுதியில் முனீஸ்வரி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது கூறியதாக தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து விடுதி நிர்வாகத்தினர் தேனி குழந்தைகள் நல அலுவலர் விஜயலட்சுமியிடம் தகவல் தெரியப்படுத்தவே உடனடியாக அவர் சிறுவனை விசாரித்து போடி மகளிர் காவல் நிலையத்தில் முனீஸ்வரி மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

புகார் அளித்ததை தொடர்ந்து போடி அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் முனீஸ்வரியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.