விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பரோட்டா மாஸ்டர் .
திருச்சி கே.கே.நகர் நாதர் நகர் 1-வது கிராஸ் தேவராய நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 57). பரோட்டா மாஸ்டர். இவர் குடும்பத் தகராறில் குடும்பத்தை பிரிந்து கடந்த இரண்டு வருடங்களாக வசித்து வந்தார். இவர் காஜாமலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்து பரோட்டா மாஸ்டர் ஆக திருவானைக்காவல் பகுதியில் பணியாற்றி வந்தார் .
இந்நிலையில் ஹோட்டல் அருகில் தங்கி இருந்த இவர் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. உடனே ஊழியர்கள் கதவை திறந்து பார்த்தனர் .அப்போது புரோட்டா மாஸ்டர் முஸ்தபா அங்கு பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து விடுதி நிர்வாகம் சார்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் எப்படி இறந்தார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வாட்டர் டேங்க் அருகில் 50 வயது மதிப்புள்ள பெண் ஒருவர் பிணமாக நிடந்தார்.
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் பெண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ?எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.