தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றிய திமுக அரசை கண்டித்து லால்குடியில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் . தெற்கு மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்பு .


அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியில் ஆணைக்கிணங்க
தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வருவதையும், போதை பொருட்கள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ள விடியா திமுக அரசை கண்டித்து
லால்குடி நகர கழகம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற
மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பங்கேற்று கண்டன உரையாற்றி கோஷங்கள் எழுப்பினார் .

மனித சங்கிலியில் பொதுமக்களும், லால்குடி ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

