திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆலோசனைப்படி வீரவணக்க நாள் நிகழ்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாணவர் அணி செயலாளர் தலைமையில் நடைபெற்றது .

மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளரின் ஆணைக்கிணங்க,
மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை நினைவுக்கூறும் வீரவணக்கநாள் நிகழ்வுகளை நடத்திட தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்களின் ஆலோசனையின்படி,
திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில் நடத்த போகும் இந்நிகழ்விற்கான கலந்தாய்வு கூட்டம், மாணவரணி செயலாளர் நாகூர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் C.S.பிரபாகரன் (துணை தலைவர்), N. சதீஷ்குமார் (துணை தலைவர்), A.K.அசாருதீன் (இணை செயலாளர்), M.மனோஜ்குமார் (இணை செயலாளர்), (துணைச் செயலாளர்), T.சீனிவாசன் (துணைச் செயலாளர்), மற்றும் பகுதி மாணவரணி நிர்வாகிகள் T.பிரவீன் ,M.மோகன்,R.சந்தோஷ் T.கிஷோர் கலந்துகொண்டு வீரவணக்க நாள் நிகழ்வுகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

