திருச்சி விமான நிலையத்தில்
நாடு திரும்பிய வாலிபர் திடீர் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜமால் மைதீன் (வயது 31 ).இவர் நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமாக சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தார். அப்போது விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகள் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது ஜமால் மைதீனின் பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்த போது, அதில் இரண்டு பக்கங்களில் இருந்த முத்திரைகள் அழிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரி மெய்யப்பன் அவரை பிடித்து ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்