திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் 25 லட்சம் மதிப்பீட்டில் முதல் கட்டமாக சென்னை மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை மேயர் மு.அன்பழகன் ஆணையர் மரு.இரா .வைத்திநாதன் ஆகியோர் சென்னைக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சென்னை மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் 300 தூய்மை பணியாளர்கள், 3சுகாதார ஆய்வாளர்கள், 10தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் சுகாதாரப் பணிகளுக்கு தேவையான உபகரணங்களுடன் கடந்த 04.12.23அன்று அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் அரிசி,மளிகை பொருட்கள், போர்வைகள்,
,பிஸ்கட் பாக்கெட்டுகள், பிரட், மருந்து பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், கோதுமை மாவு ,நாப்கின்போன்ற பொருள்களை மேயர் அன்பழகன் ,
ஆணையர் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் பி. சிவபாதம் ,
மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி,
விஜயலட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் .