Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உதயாநிதி ஸ்டாலினும் கூமுட்டை தான்.அதிமுக 52 ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் குமார் பேச்சு.

0

'- Advertisement -

 

உதயநிதி ஸ்டாலினும் கூ(ல்) முட்டை தான் அவர் கையில் இருக்கும் முட்டையும் கூ(ழ்)முட்டை தான். ஸ்டாலினும், ஸ்டாலின் மகனும் கூ(ழ்) முட்டைகள் என்பதை நிரூபிக்கும் வகையில் உங்களது வாக்குகள் இருக்க வேண்டும் – திருச்சி அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்பி குமார் பேச்சு.

அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டங்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி தெற்கு ஒன்றியம், வந்தலை கூடலூர் ஊராட்சியில் நடைபெற்றது.

புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.என் சிவக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி ப.குமார் தலைமை வகித்தார்.

திரைப்பட இயக்குனர், நடிகர், அதிமுக தலைமை கழக பேச்சாளர் சி.ரங்கநாதன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் எம்.பி ப.குமார் பேசியதாவது:-

எம்ஜிஆர் ஆல் முதலமைச்சர் ஆனவர் கருணாநிதி. ஒரு நன்றி விசுவாசம் இல்லாதவர்கள் யார் என்றால் கருணாநிதி முதல், கருணாநிதி குடும்பத்தில் இருக்கின்ற உதயநிதி வரை, நன்றி விசுவாசம் இல்லாத குடும்பம் ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது கருணாநிதியின் குடும்பம் தான்.

52 ஆண்டுகளுக்கு முன்பு எந்த ஒரு தீய சக்தியை அகற்ற வேண்டும் என தொண்டர்களும், புரட்சித்தலைவரும் அதிமுகவை ஆரம்பித்தார்களோ அந்த நோக்கம் இன்றைய தினம் வரை வலுவோடு தான் இருக்கிறது.

நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில்தான் மக்கள் வாக்களித்தார்கள்.
அதிலும் 75 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது அதிமுக. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக திமுகவிற்கு வாக்களிக்கவில்லை.

அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் ஒன்றை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் நாம் ஆட்சியை இழந்தோமே தவிர மிகப்பெரிய வெற்றியை எல்லாம் ஸ்டாலின் பெறவில்லை.

 

ஸ்டாலின் மகன் சொன்னார் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை விலக்குவோம் என கூறிவிட்டு இன்று 50 லட்சம் கையெழுத்துக்கள் வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கின்றது இதை மனதில் வைத்து இப்பொழுது கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள்.

தமிழகத்தை ஆளும் ஸ்டாலின் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுப்பதற்கு மாறாக, இப்பொழுது கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் எதற்கு? எதற்கும் பிரயோஜனமில்லை.

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை தூக்கிக்கொண்டு எல்லா ஊர்களுக்கும் சென்றார். இப்பொழுது நான்கு நாட்களுக்கு முன்பாக, ஒரு முட்டையை கையில் எடுத்துக் கொண்டு திரிகிறார்.

அதில் இரண்டு முட்டைகள் இருக்கிறது. அதில் எது கூ(ழ்)முட்டை என தெரியவில்லை. இரண்டுமே கூ(ழ்) முட்டைகள் தான், உதயநிதி ஸ்டாலினும் கூ(ல்) முட்டை தான் அவர் கையில் இருக்கும் முட்டையும் கூ(ழ்)முட்டை தான். அது கூ(ழ்)முட்டை தான் என்பதை நிரூபிக்கின்ற தேர்தல், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி ஸ்டாலினும், ஸ்டாலின் மகனும் கூ(ழ்) முட்டைகள் என்பதை நிரூபிக்கும் வகையில் உங்களது வாக்குகள் இருக்க வேண்டும்.

‘கர்நாடகா காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறது. ஸ்டாலின் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கிறார், கட்டிப்பிடித்து ஆற தழுவி அவரோடு அமர்ந்து உணவருந்துகிறார்.

ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற சென்றபோது, குண்டு ராவ் வீட்டில் விருந்து நடக்கிறது அப்போது அங்கு தண்ணீர் அருந்தாமல் தமிழக மக்கள் தண்ணீர் இல்லாமல் வாழ்கிறார்கள் எனவே நான் தண்ணீர் அருந்த மாட்டேன் என்று சொன்னவர் எம்ஜிஆர்.

உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு பிறகு அந்த வீட்டிலே தண்ணீர் குடிக்கிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மக்களின் சேவகரா?, ஸ்டாலின் சேவகரா? என்பதை இந்த காவிரி பிரச்சனையில் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சுயநலவாதி குடும்பம். மூன்றாவது தலைமுறையாக ஸ்டாலின் குடும்பம் மன்னராட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதில் எதன் அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்கிறீர்கள் என்பது தெரியவில்லை, காரணம் ஸ்டாலின் ஒரு பொம்மை, அவருக்கு எந்த ஒரு நிர்வாகத் திறமையும் இல்லை, காவல்துறையை நிர்வகிப்பதற்கு அவருக்கு அருகதை இல்லை என்பதை பல நிகழ்வுகளில் பார்த்திருக்கலாம்.

திருச்சியில் திமுக அமைச்சருக்கு ஆதரவாக திமுக நாடாளுமன்ற வீட்டை அடித்து உடைத்தார்கள். அதே கும்பல் தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கடனை திருப்பி செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய சென்ற துணை தாசில்தாரையும், வங்கி ஊழியர்களையும் அடித்து உதைக்கிறார்கள்.

யார்?.. அமைச்சர் கே.என் நேருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டை சென்று தாக்கிய அதே கும்பல் இன்றைக்கு மீண்டும் ஒரு கலவரத்தை செய்கிறார்கள்.

அவர்களுக்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்ற பயம் இல்லை, காவல்துறை மீதும் பயமில்லை, ஒரே கும்பல் தான் இதை செய்கிறது அன்றைக்கு அந்த கும்பலை சட்டரீதியாக சிறையில் அடைத்திருந்தால் இன்று வங்கி அலுவலரோ, தாசில்தாரோ அடிபட்டிருக்க மாட்டார்கள்.

இப்படி ஒரு கோமாளித்தனமான ஆட்சி, கையாளாக தனமான ஆட்சி நடக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்ததால் தான், இந்த பொதுக்கூட்டத்திற்கு திரளாக வந்திருக்கிறீர்கள்.

இந்த வேகம் வருகின்ற தேர்தலில் உங்கள் வாக்குகளாக இருக்க வேண்டும் என்றார்.

  1. இந்நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம் பாலன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.டி.எம் அருண் நேரு,ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.