

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சோந்தவா் காமினி, கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சோந்தாா். சேலம் மற்றும் விருத்தாசலத்தில் டிஎஸ்பியாக பணியாற்றிய இவா், போதைபொருள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தாா். 2004-இல் ஐபிஎஸ்ஸாக பதவி உயா்வு பெற்ற இவா், ராமநாதபுரம், வேலூா், மதுரை சரகங்களில் டிஐஜியாகப் பணியாற்றினாா். 2022-இல் ஐஜியாக பதவி உயா்வு பெற்று, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை ஐஜியாகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றிய எம். சத்தியபிரியா, ஆக.4 ஆம் தேதி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, சென்னையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை ஐஜி-யாகப் பணியாற்றிய என். காமினி திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
இவா், திருச்சி மாநகர 33 -ஆவது காவல் ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பிறகு அவா் கூறியது, திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சொத்து தொடா்பான குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத லாட்டரி விற்பனை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். குற்றங்களை கண்காணிக்கவும், தடுக்கவும் மாநகரில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றாா்.

