மாநில அளவிலான தடகளம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டியில் தங்கப்பக்கம் வென்ற திருச்சி காவலருக்கு பாராட்டு.
திருச்சி மாநகரம்
கே.கே.நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ராஜராஜன் (இவரது தந்தை முத்து லோடுமேன் ).
தடகளப் போட்டியில் சிறப்பாக பங்கெடுத்து வரும் இவர் கடந்த 17 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்ற மாநில அளவிலான மாஸ்டர் தடகள போட்டியில் குண்டு எறிதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று அதில் தங்கப் பதக்கம் வென்றார்.
அதே போல நாகமங்கலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மாஸ்டர் தடகளப் போட்டியிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியிலும், காவல் துறையினருக்கு இடையிலான மாநில அளவிலான தடகளப் போட்டிகளிலும் மாஸ்டர் பிரிவில் குண்டு எறிதல் போட்டியிலும் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் கே.கே.நகர் காவல் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் சக காவலர்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.