Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வக்பு அமைப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

0

'- Advertisement -

Ad banner

வக்பு அமைப்பு குறித்து சிறப்பு சொற்பொழிவு.

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து வக்பு அமைப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்வினை நூலகத்தில் நடத்தியது.
திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் வரவேற்றார்.

நூலகர் புகழேந்தி முன்னிலை வகித்தார். வக்பு அமைப்பு குறித்து வழக்குரைஞர் பஷீர் அகமது கான் பேசுகையில்,
இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத (மார்க்க) சம்மந்தமான பணிகளுக்கும் நல்ல நோக்கங்களுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிப்பதே வக்பு ஆகும். இஸ்லாமியரின் மத (மார்க்க), சமூக மற்றும் பொருளாதார பணிகளுக்கு வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.