Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் இரண்டு லாரியுடன் கைது

0

திருச்சியில் அனுமதியின்றி மண் அள்ளிய
4 பேர் கைது – 2 லாரிகள், 1 டிப்பர் பறிமுதல்.

திருச்சியில் முறையான அனுமதி பெறாமல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் மண் அள்ளிய வகையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 2 லாரிகள், 1 ஜே சி பி இயந்திரம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு தேனீர்பட்டி பகுதியில் உள்ள, அரசு, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் அரசு அனுமதி இல்லாமல் டிப்பர் லாரிகளில் ஜேசிபி உதவியுடன் கிராவல்மண் அள்ளப்படுவதாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இரண்டு டிப்பர் லாரிகளில் ஜே சி பி உதவியுடன் மண் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த லாரிகளையும் ஜேசிபி இந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மண் அள்ளிய, திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் பொன்னுசாமி, மண்ணச்சநல்லூரை சேர்ந்த விஜயகுமார்(வயது29), பத்தாளப்பேட்டையை சேர்ந்த வ. விவேகானந்தன் (வயது 40), தெற்கு தேனீர்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது45) உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.