Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் P4 புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘பெருசு ரொம்ப பவுசு திரைப்படதொடக்க விழா,பூஜை மற்றும் படப்பிடிப்பு ஆரம்பம்..

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் கோலாகலமாகத் தொடங்கிய ‘பெருசு ரொம்ப பவுசு’ திரைப்பட பூஜை, உள்ளூர் கலைஞர்களுக்கு குவியும் வாய்ப்புகள்!

P4 புரொடக்ஷன் (P4 Production) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘பெருசு ரொம்ப பவுசு’ (Perusu Romba Pavusu). இத்திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை இன்று காலை திருச்சி இரட்டைமலை கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 

​பூஜை வழிபாடுகள் முடிந்த கையோடு, கோயில் அருகிலேயே திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் (Shooting) விறுவிறுப்பாகத் தொடங்கியது.

​இந்தத் திரைப்பட பூஜை விழாவில் சினிமா பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

 

​இயக்குநர்: விக்னேஷ் யோகி

​தயாரிப்பாளர்கள்: பிரபு, ரமேஷ்

​ஒளிப்பதிவாளர்: தேவா சூர்யா

​நட்சத்திரங்கள்: பிரபல நடிகர் சென்ராயன், அஸ்மிதா, கணேஷ், கஜேஷ் நாகேஷ், சாந்தி மாஸ்டர், அலெக்ஸ் ராஜா, விக்னேஷ், திருச்சி ரமேஷ் மற்றும் பல முக்கியக் கலைஞர்கள் இந்த விழாவில் முன்னிலை வகித்தனர்.

 

​இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் தொடங்குவதால், இங்குள்ள ஏராளமான துணை நடிகர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இது உள்ளூர் கலைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்து.

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பன்முக கலைஞர்கள் நல சங்கம்’, உள்ளூர் சங்க உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்பளித்ததற்காக ‘பெருசு ரொம்ப பவுசு’ திரைப்படக் குழுவினருக்கு தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

​உள்ளூர் கலைஞர்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பு

​இதுகுறித்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் கூறுகையில், “திருச்சியில் இது போன்ற திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இதன் மூலம் இங்குள்ள திறமையான உள்ளூர் கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்” என்று தங்களது மகிழ்ச்சியையும் கோரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.