வரும் தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி.திமுகவினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திருச்சி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நல்லாசியுடன்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளர் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில்
திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,ஓபிஎஸ் அணியினர் என மாற்றுக் கட்சிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் தொழிலதிபர் சிறுகளப்பூர் முத்தமிழ்செல்வன் ஏற்பாட்டின் பேரில் இன்று அஇஅதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டு மாவட்ட செயலாளர் குமாரிடம் வாழ்த்துகளைப் பெற்றனர்.
இந்நிகழ்வில்,
புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் M.அருணகிரி,
புள்ளம்பாடி பேரூர் செயலாளர் ஜேக்கப் அருள்ராஜ்,
மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் T.ராஜாராம்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் அருண்நேரு,
ஒன்றிய கழக துணை செயலாளர் M.கோவிந்தசாமி
மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் S.பழனிச்சாமி, மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் T.தினேஷ்ராஜா,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் D.பாஸ்கரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரசன்னகுமார் உள்ளிட்ட பலர் இந்த ஒன்றிணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

