திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையில் 100 க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் இணைந்தனர்.
இன்று திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராவணன் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் SKD.கார்த்திக்,காட்டூர் பகுதி செயலாளர் முருகானந்தம், அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபானி, பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஏற்பாட்டில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெத்தினம் தலைமையில் பொன்மலை பகுதி செயலாளர் குணசேகரன், திருவெறும்பூர் பகுதி செயலாளர் கந்தசாமி, கூத்தைப்பார் பேரூர் செயலாளர் கனகராஜ், தொகுதிச் செயலாளர் மலையாண்டி, பொதுக் குழு உறுப்பினர் .பாஸ்கர்,வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் மோகன், தொகுதி துணை செயலாளர் பொன்மலை கலியராஜ், V.P.ராமசாமி, வட்ட செயலாளர்(35 A) முருகன்,பகுதி துணை செயலாளர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள்

நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் இன்று முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்

