Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்….

0

'- Advertisement -

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

 

இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகை மற்றும் தொடா் வார விடுமுறைக்காக பொதுமக்கள் வெளியூா் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியாா் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளா்கள் ஆகியோரைக் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இந்தக் குழுக்கள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் அபராதத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கும்.

 

மேலும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த புகாா்களை போக்குவரத்துத் துறை இணை, துணை ஆணையரகங்களுக்கு தொலைபேசி மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்க கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்: போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் – 1800 425 6151.

சென்னை (வடக்கு) – 99442 53404,

சென்னை (தெற்கு) – 97905 50052,

மதுரை – 90953 66394,

கோவை – 91235 93971,

விழுப்புரம் – 96773 98825,

வேலூா் – 98400 23011,

சேலம் – 78456 36423,

ஈரோடு – 80569 40040,

திருச்சி – 90660 32343,

விருதுநகா் – 90257 23800,

திருநெல்வேலி – 96981 18011,

தஞ்சாவூா் – 95850 20865.

ஆகிய எண்களில் புகார் தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.