திருச்சியில் தீராத வயிற்று வலி காரணமாக தனியார் நிறுவன ஊழியர் எடுத்த பரிதாப முடிவு.
காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை .
திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 55)., தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்து உள்ளார்.
இதனால் சம்பவத்தன்று தனது வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 
அங்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

