திருச்சி மக்கள் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தினை எளிதில் அணுகக்கூடிய வகையில் அரியலூரில் புதிய கிளை தொடக்கம்.
ஆரியலூர் மாவட்டத்தில் இன்று புதிய கிளையைத் தொடங்கியது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்.
திருச்சி: இந்தியாவின் முன்னணி தனியார் சுகாதார காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலையட் இன்சூரன்ஸ், இன்று ஆரியலூர் மாவட்டத்தில் தனது புதிய கிளையை சிறப்பான முறையில் தொடங்கி வைத்தது.
இந்த தொடக்க விழாவில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் மண்டல மேலாளர் ஆர்.அசோக் மற்றும் ஆரியலூர் கோல்டன் ஹாஸ்பிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மருத்துவர் டி. கண்மணி (MBBS, D. Ortho) ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழா பாரம்பரிய பூர்ண கும்ப வரவேற்புடன் தொடங்கி, குத்துவிளக்கு ஏற்றுதல் நிகழ்வுடன் தொங்கியது,
விழாவில் உரையாற்றிய திருச்சி மண்டல மேலாளர் அசோக் ஆர், கடந்த ஆண்டின் வணிக வளர்ச்சி, தீர்வு செய்யப்பட்ட கோரிக்கைகள், முகவர் வலிமை, நெட்வொர்க் மருத்துவமனைகளின் விரிவாக்கம், வாடிக்கையாளர் மைய நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார்.
நிறுவனத்தின் அடிப்படை நோக்கத்தை மீண்டும் வலியுறுத்திய அவர்:
“வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு, தரமான சுகாதார காப்பீட்டு சேவைகளை எளிதாக, கிளை மட்டத்தில் வழங்குவதே ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் முக்கிய இலக்காக உள்ளது” என்று தெரிவித்தார்.

வாடிக்கையாளர் மைய சேவையின் சிறந்த எடுத்துக்காட்டு:
நடப்பு நிதியாண்டில், திருச்சி மண்டலம் மொத்தம் 11,685 கோரிக்கைகளை ₹82 கோடி மதிப்பில் வெற்றிகரமாக தீர்வு செய்து, வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான சேவையை வழங்கியுள்ளது. இதனுடன், ₹26.5 கோடி புதிய வணிகத்தையும் பெற்றுள்ளது.
விழா இறுதியில், பகுதி மேலாளர் வேலுசாமி நன்றி உரையாற்றி, விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள், ஊழியர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
ஆரியலூரில் புதிய கிளை தொடங்கப்பட்டதன் மூலம், திருச்சி மக்களுக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் நம்பகமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய
சுகாதார பாதுகாப்பு சேவைகள் மேலும் அருகில் வந்து, அதன் சேவை வலையமைப்பும் வாடிக்கையாளர் அணுகலும் வலுப்பெறுகிறது.

