திருச்சியில் திருமணமான 3வது மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை.
காரணம் என்ன?போலீசார் விசாரணை
திருச்சி தில்லைநகர் ஏழாவது கிராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் உமையாள் . இவரது மகள் விசாலாட்சி (வயது 28) இவருக்கும் காரைக்குடி கொத்தமங்கலத்தை சேர்ந்த முத்து (வயது 30) என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது..முத்து சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் திருமணம் முடிந்து
விசாலாட்சி சென்னையில்
கணவர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் விசாலாட்சிக்கு சென்னையில் தங்கி இருப்பது பிடிக்காத காரணத்தால்
கடந்த சில நாட்களுக்கு முன்ப திருச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இதையடுத்து நேற்று தாய் உமையாள் காரைக்குடியில் உள்ள உறவினர் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். திருப்பி வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது மகள் விசாலாட்சி மின்விசிறியில்
சேலையில் தூக்கில் பிணமாக தொங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பதறி துடித்தார். பிறகு அவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு.அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தார். அங்கு விசாலட்சியை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவ குழுவினர் விசாலாட்சி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து உமையாள் தில்லைநகர் காவல் நிலைய போலீசாரிடம் ‘புகார் கொடுத்துள்ளார். அப் புகாரின் பேரில் அடிப்படையில் தில்லைநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாலட்சமி
இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் ஆன மூன்றாவது மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

