திருச்சி மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.
அதன்படி திருச்சி மாநகரத்திற்கு உட்பட்டபல்வேறு பகுதிகளில் நாளைக்கு செவ்வாய்க்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்கமுடியாத அவசரகால பராமரிப்பு பணியின் காரணமாக திருச்சி மன்னார்புரம் மின்நிலையத்தில் 33/11KV துணை பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நாளை செவ்வாய்க்கிழமை (25.11.2025) காலை 09.45 மணி முதல் 5 மணி வரை மன்னார்புரம் டி.வி.எஸ்.டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, C.H காலனி, உஸ்மான்அலி தெரு, சேதுராமன்பிள்ளைகாலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு, கேசவ நகர், காஜா நகர், ஜே.கே..நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்ரமணியபுரம், ராஜா தெரு, அண்ணா நகர், ரஞ்சிதபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை,கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, முல்லை நகர், செங்குளம் காலனி. இபி. காலனி, காஜாமலை, தர்கா ரோடு, (கலெக்டர் பங்களா,மன்னார்புரம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துகொள்ளபடுகிறது
என மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .

