ஸ்ரீரங்கத்தில் முதியோர் இல்லம் நடத்தி வந்தவர் மூச்சு திணறி பரிதாப சாவு
ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் ராபின் (வயது 32) இவர் அந்த பகுதியில் முதியோர் இல்லம் வைத்து நடத்தி வருகிறார்.
ராபினுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படும். இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது
இதையடுத்து ஆபத்தான நிலையில் ராபின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் ராபின் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

