திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு மின்வினியோகம் இல்லை.
இதனால் இந்த நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர், ஜே.கே.நகர், செம்பட்டு, காஜாமலை, ரெங்காநகர், சுப்ரமணிய நகர், வி.என். நகர், தென்றல் நகர், கவிபாரதிநகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்புநகர், எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல்நகர், இ.பி. காலனி, அரியமங்கலம், மலையப்பநகர், ரெயில்நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேலகல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், அம்பேத்கர் நகர், விவேகானந்தர் நகர், எல்.ஐ.சி. காலனி.
விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்த்நகர், சுப்ரமணிய நகர், கே.கே.நகர், அம்மா மண்டபம், பாலாஜி அவென்யூ, ஸ்ரீரங்கம், மேலூர், பெரியார் நகர், திருவானைக்காவல், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் வினியோகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் இருக்காது. நாளை (திங்கட்கிழமை) வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

