Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தொடர் காத்திருப்பு போராட்டம் .

0

'- Advertisement -

 

திருச்சியில் தொடர் காத்திருப்பு போராட்டம் .

 

1.4.2003 ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

23 மாதகால ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெரும் அகவிலைப்படி மருத்துவக்காப்பீடு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு, குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்வு வழங்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிபடி அனைவருக்கும் பழைய பென்ஷன் வழங்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும்.

என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன

திருச்சி – கரூர் மண்டலங்கள்

சார்பில் இன்று காலை (திங்கள் கிழமை ) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி புறநகர் கிளை முன்

தொடர் காத்திருப்பு

போராட்டம் நடைபெற்றது.

 

போராட்டத்திற்கு டி. என்.எஸ்.டி.சி திருச்சி கரூர் மண்டல தலைவர் சிங்கராயர்,

ஓய்வு பெற்றோர்

சங்க நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டத்தை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார்.

கோரிக்கைகளை விளக்கி டி.என்.எஸ்.டி. சி திருச்சி,கரூர் மண்டல பொதுச்செயலாளர் மாணிக்கம்,

எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவர் அருள் தாஸ்,

எஸ்.சி.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் ராமதாஸ், சண்முகம், ஜெயராமன், டி.என்.எஸ்.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் கருணாநிதி, சிவானந்தம்,

சிஐடியு மண்டல துணை பொதுச்செயலாளர்கள் முருகன், பாலசுப்பிரமணியன்,

எஸ்சிடிசி மகேந்திரன், மண்டல பொருளாளர் முத்துக்குமார் மண்டல துணைத் தலைவர்கள் பிரபு, முத்துக்கருப்பன், மண்டல துணை செயலாளர் நீலமேகம்

ஆகியோர் பேசினர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.