திருச்சியில் பிறந்தநாள் விழாவில் டீ மாஸ்டருக்கு கத்தி குத்து.
2 பேர் கைது – 3 பேர் எஸ்கேப் .
திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 24). சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். .இவர் தனது சகோதரர் தனசேகரன் என்பவருடன் திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறை
பகுதியில் உள்ள பிறந்தநாள்விழா விருந்துக்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த மதன்குமார் (வயது 25 ) தரப்புக்கும், ஜீவானந்தம் இடையேயும் தகராறு ஏற்பட்டது.
இதில் மதன்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 23), சுப்பிரமணி (வயது 27), முகம்மது, ரகுநாதன் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து ஜீவானந்தத்தை கத்தியால் குத்தி, மரக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் ஜீவானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட ஐந்து பேர் மீதும் திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்குமார், முகமது ரசூல் ஆகிய 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்த உள்ளார்.
மேலும் தலைமறைவாக உள்ள 3 நபர்களையும் வலைபேசி தேடி வருகின்றனர்.