Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக லி.மதுபாலன் இன்று பொறுப்பேற்பு .

0

'- Advertisement -

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் புதிய ஆணையராக

லி.மதுபாலன், இ.ஆ.ப.இன்று பொறுப்பேற்றார்

 

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக

பணியாற்றிய லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (27.06.2025) ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.