திருச்சி தாராநல்லூரில்
கணவருடன் தகராறு; இளம்பெண் திடீர் மாயம்
காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.
திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்தவர் வேலுசாமி (வயது 38) இவரது மனைவி நீலாவதி (வயது 35). இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற நீலாவதி மீண்டும் வீடு திரும்பவில்லை.
உற்றார் உறவினர்கள் , நண்பர்கள் வீடுகளில் எங்கு தேடியும் அவர் குறித்த எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிகிறது.
இது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.