திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் உறவுகளுக்கு வணக்கம் .
இன்று 23/6/2025 திங்கள் கிழமை முதல் வழக்கறிஞர் வாகனம் மட்டும் jm கோர்ட் நீதிமன்றம் அருகில் அனுமதிக்கப்படும் .
மேலும் நீதிமன்றத்திற்கு வரும் வழக்காடிகள் வண்டிகள் பிள்ளையார் கோயில் அருகிலும் பழைய அடிஷனல் மயிலா கோர்ட் அருகாமையிலும் வண்டியை நிறுத்த நீதிமன்ற ஊழியர்கள் பணியில் இருந்து ஒழுங்கு படுத்துவார்கள் .
.
அது சமயம் நம் வழக்கறிஞர்கள் தனது வாகனத்தை jm ( judicial magistrate) நீதிமன்றம் அருகில் உள்ள தார் சாலையில் நிறுத்த வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
jm நீதிமன்றத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் வாகனம் jm கோர்ட் நீதிமன்றம் அருகில் அனுமதிக்கப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் என வெங்கட் தனது அறிக்கையில் கூறியுள்ளார் .