திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த
நீதிமன்றத்தில் தேசியம க்கள் நீதிமன்றம்
நீதிபதிகள் பங்கேற்பு.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்
திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர், முன்னிலையில் உடனடி தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகை வழங்கினார்.
இதில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி. சுவாமிநாதன், தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா , சார்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள். வழக்கறிஞர் சங்க தலைவர் கணேசன்,வழக்கறிஞர் சங்க செயலாளர் சி.முத்துமாரி,குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி .வெங்கட், துணைத் தலைவர் வடிவேல்சாமி, தலைமை அரசு வழக்கறிஞர் சவரிமுத்து. வழக்கறிஞர்கள், நீதிமன்றப்பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட சமரச தீர்வு மைய செயலாளர், சார்பு நீதிபதி. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரபு ஏற்பாடு செய்திருந்தார்.