திருச்சி மத்திய சிறையில் உணவு உண்ணுவதில் ஏற்பட்ட தகராறில் கைதிகள்
2 பேருக்கு காயம்.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் சுமார் 750 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.இந்நிலையில் சிறை கைதிகளுக்கு தினமும் வளாகத்தில் உணவு சமைக்கப்பட்டு
வழங்கப்படுவது வழக்கமாகும்.
இந்த நிலையில்

ஆயுள் தண்டனை கைதிகளில் ஒருவரான சக்திவேல் என்பவர் மற்ற கைதிகளுக்கு உணவு விநியோகித்து வருவது வழக்கமாகும். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி அன்று இரவு, அபிஷேக் (வயது 20), அஷன் அலி (வயது 28), பிரகாஷ்ராஜ் (வயது 20), ஷமீர் அஹமது (வயது 22), வாழ மட்டை (எ) சச்சின் (வயது 20) சைவ சபரிராகவன் (வயது 19), நித்தின் (வயது 23) , அஜிபுதீன் (வயது 25) ஆகிய 8 கைதிகளும் தாங்களவே உணவை எடுத்துக் கொண்டனர். இதனை பார்த்த சக்திவேல் உணவுவை நீங்களாக எடுக்காதீர்கள். என்னிடம் கேளுங்கள். நான் உணவை எடுத்து கொடுக்கிறேன். நீங்கள் எடுக்க கூடாது , காலையில் ஜெயிலரிடம் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால்
கோபமடைந்த
8 கைதிகளும் சட்டவிரோதமாக கூடி சக்திவேலை மோசமான வார்த்தைகளில் திட்டி, கையால் தாக்கி மிரட்டினர். அப்பொழுது அந்த நேரத்தில், மற்றொரு கைதி அய்யர் என்பவர் அங்கு வந்தார். அப்பொழுது கூடியிருந்த 8 கைதிகளை பார்த்து சக்திவேலை ஏன் தாக்கினார்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு அந்த 8 கைதிகளும்உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்று கூறி அய்யர்ரை தாக்கி மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தால் சக்திவேல், அய்யருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து சிறைத் துறை அதிகாரி மணிகண்டனுக்குதகவல் தெரிந்தது. இதையடுத்து அவர் கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கேகே நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்துக்குள் கைதிகள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.