அதவத்தூரில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்.
அதவத்தூரில்
ரூபாய் 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடங்களை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அதவத்தூரில் செயல்படும் முத்துராஜா மான்ய நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி போர்ட் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள

புதிய வகுப்பறை கட்டடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகரக் திமுக செயலாளரும் மண்டல குழு தலைவருமான
மு.மதிவாணன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் அங்கத்தினர் தலைவர் ராம கணேசன் செயலாளர் ரமேஷ் நடராஜன் பொருளாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகள், ஊர் பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.