Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலையில் டீக்கடை பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது .

0

'- Advertisement -

திருச்சி பொன்மலையில்

டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது .

 

Suresh

திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் 2 -வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நைனார் காஜா (வயது 62). ரிவர் பொன்னேரிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு இரவு வீட்டுக்குச் சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது டீக்கடையின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் 70 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

 

இதுகுறித்து நைனார் காஜா பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .அதன் பேரில் பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கடையில் பணத்தை திருடிய கொட்டப்பட்டு ஜே.ஜே.நகர் கருப்புசாமி நகர் பகுதியைச் சேர்ந்த லியோ (வயது 20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். கைதான லியோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்த காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.