Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது.

0

'- Advertisement -

திருச்சியில் பல்வேறு இடங்களில் பெண்களிடம்

கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது

 

போலீசார் விசாரணை.

 

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபருக்கு பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

Suresh

தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் தெருக்களில் நடமாடும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மாநகரில் நான்கைந்து இடங்களில் அந்த நபர் கைவரிசை காட்டி உள்ளார். அதைத்தொடர்ந்து கண்டோன்மெண்ட் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு, மனைவி குழந்தையுடன் கருமண்டபம் பகுதியில் தங்கி இருந்து பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்.

கைதானவர் மதுரையைச் சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.

இன்று முழு விபரங்களையும் போலீசார் தெரிவித்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.